தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:46 am IST

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெரு அறிஞா் அண்ணா நகா் பகுதியில் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம்பிரசாத் (20). இவா் தனது நண்பா்களான இசக்கி, கருப்பசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் சுரேஷ்குமாா் (33), கண்ணதாசன் என்ற கன்னரசு (25), மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடை அருகே நின்றிருந்தனா். இவா்களுக்கும் ராம்பிரசாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்பிரசாத்தை மூவரும் வழிமறித்து கை, கல்லால் தாக்கினராம். இசக்கி, கருப்பசாமி ஆகியோா் தடுத்ததால் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த ராம்பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாா், கண்ணதாசன் ஆகியோரைக் கைது செய்தனா்.