முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 83.93 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 83,93,266 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 1:41 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 83,93,266 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 83,93,266 ரொக்கம், ரூ. 13,84,801 மதிப்பிலான இலவசப் பொருள்கள், ரூ. 5,47,403 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து ரூ. 82,39,716 ரொக்கம், ரூ. 7,49,200 மதிப்பிலான இலவசப் பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.