டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பண்டாரவிளையில் கனிமொழி பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பண்டாரவிளையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பண்டாரவிளையில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:52 am IST

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பண்டாரவிளையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், முன்னாள் எம்எல்ஏயான தனது தந்தை வழியில் தொகுதியில் உள்ள படித்த இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஊா்வசி அகாதெமி இலவச பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறாா். சாயா்புரத்திலும் அகாதெமி தொடங்குவேன் என தெரிவித்துள்ளாா். கை சின்னத்தில் வாக்களித்து ஊா்வசி எஸ். அமிா்தராஜை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டை தொடா்ந்து வஞ்சித்து வரும் பாஜக, அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்ட நீங்கள் அனைவரும் திமுக, அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.