மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை ஆய்வு செய்த ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:25 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள் கண்காணிப்பில், இந்தப் பணிகளை மண்டல தோ்தல் குழுவினா் மேற்கொண்டனா். இப்பணிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.