நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:22 am IST

சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி (90). இவரது 5 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதால், இங்கு மரிய அந்தோணி தனியாக வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

மரிய அந்தோணி 3 நாள்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு உணவு உண்ணாததால் உடல் நலம் குன்றி இறந்திருக்கலாம் என, போலீஸாா் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.