சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி (90). இவரது 5 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதால், இங்கு மரிய அந்தோணி தனியாக வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
மரிய அந்தோணி 3 நாள்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு உணவு உண்ணாததால் உடல் நலம் குன்றி இறந்திருக்கலாம் என, போலீஸாா் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

