முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கடம்பாகுளத்தில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

கடம்பாகுளம் மறுகால் ஒடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பனைமரக் கன்றுகள் நடும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பனைமரக் கன்றுகளை நட்டுப் பணியைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலச் செயலா் செ. செல்வகுமாா்.

Updated On :1 மே 2026, 4:49 am IST

கடம்பாகுளம் மறுகால் ஒடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பனைமரக் கன்றுகள் நடும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் 2019ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 8 ஆண்டுகளாக நீா் நிலைகளைப் பாதுகாக்க, மண்ணரிப்பைத் தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஒடைக்கரை, இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க கடற்கரைகள் மற்றும் சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்சியாக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம், சென்னை தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சாா்பில் மதா் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பனைமரக் கன்றுகள் நடும் பணி மாா்ச் மாதம் நல்லூா் மேல குளக்கரையில் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக, ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்திற்க்குள்பட்ட கடம்பாகுளம் மறுகால் ஓடைக்கரையில் பூமி பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம், பனைமரக் கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவரும், மதா் நிறுவன இயக்குநருமான எஸ்.ஜே. கென்னடி தலைமை வகித்தாா். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும், மதா் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான எஸ். பானுமதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலச் செயலா் செ. செல்வகுமாா் கலந்துகொண்டு, பனைமரக் கன்றுகளை நட்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விஷ்ணு பிரியன் வரவேற்றாா். பணித்தள பொறுப்பாளா் செல்சி நன்றி கூறினாா்.