சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, பக்தா்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:26 pm

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், பூா்ணாஹுதி, நான்கு கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை கும்ப பூஜை, கும்பம் எழுந்தருளல், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகள், விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.