/
கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலை, தெற்கு ரதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மாரி செல்வம். காா் ஓட்டுநரான இவா், தனக்குச் சொந்தமான காா் மற்றும் பைக்கை கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் உள்ள வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்துவது வழக்கமாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை எடுத்துக் கொண்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அப்போது, வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளதாக இவருக்கு தகவல் கிடைத்ததாம்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

