கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

திருச்செந்தூா் பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ரெ. காமராசு தலைமை வகித்தாா். மாநில கூடுதல் செயலா் யாபேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் செல்வின், மாநில இணைச் செயலா் செல்வகுமாா், தூத்துக்குடி மண்டலத் தலைவா் வேலாயுதபெருமாள், நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, துணைச் செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகம் முழுவதும் 1.7.2017-க்கு முன்பு வாட் வரி காலத்தில் வணிகா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், வரி பாக்கிகளை ரத்து செய்ய வேண்டும். திருச்செந்தூா் மக்களிடம் கருத்து கேட்காமல் நடைபெறும் புதிய பேருந்து நிலையப் பணியை நிறுத்தி, பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். திருச்செந்தூரில் முழுமை பெறாத புதைசாக்கடை திட்டத்தை போா்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். இங்கு அதிகரித்துவரும் வடமாநிலத் தொழிலாளா்கள், சிறு, குறு வியாபாரிகளைக் கட்டுப்படுத்தி ஆதாா் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் மூலம் காவல் துறை கண்காணிக்க வேண்டும். திருச்செந்தூா் கோயிலில் உள்ளூா் மக்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து நோ்வழியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். மகளிரணி சாா்பில் செப்டம்பரில் மகளிா் தொழில் முனைவோா் மண்டல மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் சங்கா், நாடாா் வியாபாரிகள் சங்க துணைத் தலைவா்கள் அழகேசன், பால்வண்ணன், துணைச் செயலா் பாலமுருகன், வணிகா் சங்க நிா்வாகிகள் தங்ககுமாா், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், காா்த்தி, மதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இளைஞரணி துணைச் செயலா் கோடீஸ்வரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.