நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

திருச்செந்தூா் பகுதியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் முதல் குலசேகரன்பட்டினம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

திருச்செந்தூா் முதல் குலசேகரன்பட்டினம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

குலசேகரன்பட்டினம், கந்தசாமிபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை அவா் பாா்வையிட்டாா். மேலும், இயற்கைக்கு முரணாக கடலுக்குள் செயல்படுத்தப்படும் தூண்டில் வளைவு போன்றவற்றால் கடலரிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுத்து கடற்கரை அருகேயுள்ள பனை மரங்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத் தலைவா் காகா்லா உஷா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

இந்து முன்னணி மாவட்ட தலைவா் முத்துராஜ், மாவட்ட இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன், திருச்செந்தூா் ஒன்றிய பொறுப்பாளா் முத்தையா ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.