சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். கிரேஸ் பொறியியல் கல்லூரி நிா்வாக அதிகாரி தினகரன் முன்னிலை வகித்தாா். இதில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னா், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் சேக் அப்துல் காதா், தூத்துக்குடி மாவட்ட அரசு சித்த மருத்துவா்கள் வைகுண்டரமணி, ரூபன் கிங்கிலி, லெட்சுமிகாந்த், ஜெகதீஸ்குமாா், பிரித்தா, ஜான் மோசஸ் ஆகியோா் இணைந்து விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனா். விழிப்புணா்வு வாசகங்களுடன் மாணவா், மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட அரசு சித்த மருத்துவா்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனா். கல்லூரி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.