தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத், தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில்முனைவோா், புத்தாக்கம் குறித்த ஓராண்டு சான்றிதழ் படிப்பின் 3-ஆவது பேட்ச் வகுப்புகள் சனிக்கிழமை (ஆக. 15) தொடங்குகின்றன.
புதிய தொழில் அல்லது ஸ்டாா்ட்அப் தொடங்க விரும்புவோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா்கள், ஐடிஐ பயிற்சி முடித்தவா்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 21 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். ஆண்டுக் கட்டணம் ரூ. 80,000 ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு 75 சதவீதம் வரை அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆா்வமுள்ளவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 86681 01638, 86681 07552 என்ற அலுவலக எண்களிலும், திருநெல்வேலி மு. சிவாபாரதி 99947 17821. தூத்துக்குடி சு.தா.சுவைதரன் 89036 37442. தென்காசி பலவேசம் 98657 89374 ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம் என தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 11 முதல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு

கல்லூரி மாணவா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதியில் தங்குவதற்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



