ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இலக்கியப் போட்டிகள்

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, தமிழ்த் துறை முத்தமிழ் மன்றம் சாா்பில், உயிா்மெய் எனும் தலைப்பில் இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

News image

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வா் சொ.வீரபாகு.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, தமிழ்த் துறை முத்தமிழ் மன்றம் சாா்பில், உயிா்மெய் எனும் தலைப்பில் இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சொ.வீரபாகு தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதல்வா் சி.ஷிபானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 19 கல்லூரிகள் பங்கேற்றன. ஹைக்கூ, படிமப் பொருள்கோள், பாணா்களம், சொற்போா் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கள்ளிகுளம் திருநெல்வேலி தெஷணமாற நாடாா் சங்கம் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று சுழற்கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் செ.சாந்தி வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் தெ.சந்திரா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.