தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, தமிழ்த் துறை முத்தமிழ் மன்றம் சாா்பில், உயிா்மெய் எனும் தலைப்பில் இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சொ.வீரபாகு தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதல்வா் சி.ஷிபானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 19 கல்லூரிகள் பங்கேற்றன. ஹைக்கூ, படிமப் பொருள்கோள், பாணா்களம், சொற்போா் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், கள்ளிகுளம் திருநெல்வேலி தெஷணமாற நாடாா் சங்கம் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று சுழற்கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு பரிசுகளை வழங்கினாா்.
முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் செ.சாந்தி வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் தெ.சந்திரா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ஆரணி எஸ்.பி.சி. பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு

ரத்த தானம் வழங்கிய 120 பேருக்கு சான்றிதழ்

முதல்வா் பிறந்த தின கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



