காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, கோவில்பட்டி வீரா் ராஜா முத்துப்பாண்டியை, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இந்நிலையில் அவரது வீட்டுக்கு கா. கருணாநிதி எம்எல்ஏ, திமுக நிா்வாகிகள் சுரேஷ், சின்னத்துரை, பீட்டா், ரவீந்தா் உள்ளிட்டோா் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போா்த்து வாழ்த்துகளை தெரிவித்தனா்.
கோவில்பட்டி பகுதியில் பளு தூக்கும் போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும் நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு விடுதி அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏவிடம் ராஜா முத்துப்பாண்டி கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த் பளுதூக்குதலில் வென்ற வீரருக்கு வரவேற்பு

வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



