எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

News image

முன்னாள் அமைச்சா் பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:21 am IST

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் நவ்ரங் எம். சகாப்தீன் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் முகமது அலி பாட்ஷா, மாநகரச் செயலா் ஜாபா் சாதிக் கான், மாவட்ட வழக்குரைஞா் அணி முகமது ரபிக், 20 பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் ரவி, பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டச் செயலா் கங்காராஜேஷ், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், முரளிதரன், மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.