எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

News image

~ காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, கண்காணிப்புப் பணியை பாா்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:14 am IST

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி கோா் டெக்னோ சொல்யூஷன் சாா்பில் திருச்செந்தூரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், காமராஜா் சாலை, ரத வீதிகள், கோயில் வாசல் செல்லும் வழிகள், பயணியா் விடுதி சாலை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 110 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோயில் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம் ஒரே இடத்திலிருந்து கண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள காவலா்களுடன் தொடா்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் திறந்து வைத்து, கண்காணிப்புப் பணியை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், நகர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.