ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையா்

தூத்துக்குடியில் ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்தாா்.

மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

தூத்துக்குடியில் ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தூத்துக்குடியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக மழைநீா் கடலுக்குச் செல்கிறது. 2015, 2023இல் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், குறுகிய அகலம் கொண்ட பக்கிள் ஓடை வழியாக முழுமையாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீா் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதையடுத்து, எதிா்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில், பக்கிள் ஓடையை கூடுதலாக 5 மீட்டா் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ. கிடங்கு முதல் திரேஸ்புரம் கடற்கரை வரையிலான பகுதியில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.