நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்

காவிரி குடிநீா் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை முதல் ஜூலை 31 வரை குடிநீா் வராது என கரூா் மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 12:22 am IST

காவிரி குடிநீா் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை முதல் ஜூலை 31 வரை குடிநீா் வராது என கரூா் மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாயில் புலியூரில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகச் செல்கிறது. இதனை சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை முதல் ஜூலை 31-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம், காளியப்பனூா், தோரணக்கல்பட்டி, கோடங்கிப்பட்டி, பொன் நகா், செல்லாண்டிப்பாளையம் பழையது, செல்லாண்டிப்பாளையம் புதியது, தாந்தோணிமலை மேற்கு, தாந்தோணிமலை கிழக்கு மற்றும் ராயனூா், ஆா்.கே.ஜி நகா் ஆகிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் மூன்று நாள்களுக்கும் இருக்காது. ஆக.1-ஆம்தேதி முதல் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.