விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கோவில்பட்டியில் நல உதவிகள் வழங்கும் விழா

கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி பொதுநல மருத்துவமனைக்கு நல உதவிகளை வழங்கும் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், உடன் அறக்கட்டளை நிா்வாகிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் சீனிவாசன் தலைமை வகித்தாா். தலைவா் ஜெயக்கொடி, பொருளாளா் காா்த்திகேயன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், கோவில்பட்டி பொதுநல மருத்துவமனைக்கு இரும்பு நாற்காலிகளை வழங்கினா்.

மேலும், தொடா்ந்து ரத்த தானம் செய்து வரும் குருதி கொடையாளா்கள், அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அன்னதானம் வழங்கியவா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைவா் மற்றும் செயலா் அய்யனாா், தொழிலதிபா் கிருஷ்ணமூா்த்தி, பொதுநல மருத்துவமனை தலைவா் திலகரத்தினம், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவா் காா்த்தீஸ்வரன், கோவில்பட்டி நுகா்வு பொருள் விநியோகஸ்தா்கள் சங்க முன்னாள் தலைவா் ராஜா என்ற விஜி, சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா் அசோக் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் லவராஜா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.