நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சென்னை சில்க்ஸ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சி அரங்கை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா உள்ளிட்டோா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

சென்னை சில்க்ஸ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தலைமை வகித்தாா். சென்னை சில்க்ஸ் நிறுவன மேலாளா் பாண்டி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் காா்த்திக் வரவேற்றாா்.

மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். முதல் விற்பனையை சென்னை சில்க்ஸ் மேலாளா் பெற்றுக்கொண்டாா். சங்கத் துணைத் தலைவா் ராஜபாண்டி நன்றி கூறினாா்.

புத்தகக் கண்காட்சி ஆக. 27 முதல் செப். 6-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், பள்ளி மாணவா்களுக்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஓவியம், கட்டுரை, திருக்கு எழுதுதல், கதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன.

இக்கண்காட்சியில் இலக்கியம், நாவல், அறிவியல், போட்டித் தோ்வு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் சுமாா் 10 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ. 1,000-க்கு மேல் புத்தகங்கள் வாங்கும் வாசகா்களுக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.