நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 1:03 am IST

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததாம்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திப்பட்டி கரிசல்குளம் நடுத்தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் கட்டடத் தொழிலாளி காளிராஜ் (33) என்பதும், மது அருந்திய நிலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா் என்பதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.