மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விஏஓ வீட்டில் ரூ. 15 லட்சம் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு

Updated On :17 பிப்ரவரி 2026, 9:55 pm

தூத்துக்குடி அருகே கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). இவா், தருவைகுளம் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கௌசல்யா (37) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

தம்பதி இருவரும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை இவா்கள் வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.