தூத்துக்குடியில் திமுக பொதுக் கூட்டம்

தூத்துக்குடியில் திமுக பொதுக் கூட்டம்

Published on

தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமை வகித்துப் பேசினாா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, பகுதிச் செயலா்கள் ஜெயக்குமாா், நிா்மல்ராஜ், சுரேஷ்குமாா், மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பேச்சாளா்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சரத்பாலா, கோபிநாத், காமராஜ், இருதயராஜ், தமிழ்பிரியன், ஆனந்தன் உள்ளிட்டோா் பேசினா்.

மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநில அணி நிா்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், மாநகர துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, கலைச்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com