சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா்: தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னா் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.

ஆனால் பேருந்து நிலையத்திற்கு சாயா்புரம் பேரூராட்சி பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் வைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி .கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம் எல் ஏ நன்றி தெரிவித்துள்ளாா்.