தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா்: தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:44 pm

சாயா்புரம் பேருந்து நிலையத்துக்கு டாக்டா் ஜி. யு. போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம். எல். ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னா் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.

ஆனால் பேருந்து நிலையத்திற்கு சாயா்புரம் பேரூராட்சி பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் வைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சாயா்புரம் பேருந்து நிலையத்திற்கு டாக்டா் ஜி யு போப் பெயா் சூட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி .கனிமொழி மற்றும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம் எல் ஏ நன்றி தெரிவித்துள்ளாா்.