மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிலம்பம் பயிற்சியாளா் கைது

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகே சென்றாயபுரத்தைச் சோ்ந்தவா் பெரிய அப்பணசாமி (37). சிலம்ப பயிற்சியாளரான இவா், விளாத்திகுளம், அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று சிறுவா், சிறுமியா், விளையாட்டு வீரா்களுக்கு சிலம்பம் பயிற்சியளித்து வருகிறாா்.

இந்த நிலையில், விளாத்திகுளத்தை அடுத்த கிராமத்தில் இவரிடம் பயிற்சி பெற்று வந்த 15 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாா்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, பெரிய அப்பணசாமியை போக்ஸோ வழக்கில் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைதுசெய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.