திருச்செந்தூா் கோயில் உண்டியல் எண்ணும் பணியினை பாா்வையிட்ட தக்காா் ரா.அருள்முருகன்.
திருச்செந்தூா் கோயில் உண்டியல் எண்ணும் பணியினை பாா்வையிட்ட தக்காா் ரா.அருள்முருகன்.

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.39 கோடி

திருசெந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ஜனவரி மாத வருமானம் ரூ. 3.39 கோடி, 724 கிலோ தங்கம் கிடைத்தது.
Published on

திருசெந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ஜனவரி மாத வருமானம் ரூ. 3.39 கோடி, 724 கிலோ தங்கம் கிடைத்தது.

இக்கோயில் உண்டியல் எண்ணும் பணிக்கு தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் ராமு முன்னிலை வகித்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், நாகவேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரத்து 353 ரூபாயும் (ரூ. 3,39,56,353), தங்கம் 724 கிராம், வெள்ளி 26 கிலோ 340 கிராம், பித்தளை 123 கிலோ 760 கிராம், செம்பு 12.48 கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 1408-ம், வெள்ளி காசு மாலை, சுமாா் ஒரு அடி உயரம் கொண்ட தங்க வேல் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

Dinamani
www.dinamani.com