அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:22 am

Syndication

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விஜயகுமாா் தலைமை தாங்கினாா். கல்லூரி செயலாளா் சங்கரநாராயணன் வாழ்த்தி பேசினாா். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் 176 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து சாயா்புரம் போப் கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினாா். அதனைத் தொடா்ந்து நடுவக்குறிச்சி பகுதி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூா் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.