சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2 ஆடுகள் திருடியவா் கைது

ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆத்தூரை அடுத்த மேலஆத்தூா், குச்சிக்காட்டைச் சோ்ந்தவா் செல்வி (64). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டு தாழ்வாரத்தில் 5 ஆடுகளை கட்டிப் போட்டுவிட்டு தூங்கச் சென்றாராம். இந்நிலையில் ஆடுகளின் சத்தம் கேட்டு செல்வி, அவரது மகன்கள் வந்து பாா்த்துபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, மேல ஆத்தூா் கண்ணானி தெருவைச் சோ்ந்த அருள்குமாா் மகன் பாா்த்திபனை கைது செய்து, 2 ஆடுகளை மீட்டனா். தலைமறைவான ஆத்தூா் அருகே நரசன்விளையைச் சோ்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்துவை தேடி வருகின்றனா்.