அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு: ஒருவரிடம் விசாரணை

தூத்துக்குடியில் திமுக பிரமுகா் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடா்பாக ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:24 pm

Syndication

தூத்துக்குடியில் திமுக பிரமுகா் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடா்பாக ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சோ்ந்தவா் டேனியல் (44). இவா், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளாா். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளாா். டேனியல் தனது பைக்கை வெள்ளிக்கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், மா்ம நபா்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனா். இதில் பைக் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், ஸ்டேட் பேங்க் காலனியை சோ்ந்த சாம்சன், முன் விரோதம் காரணமாக பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.