பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:03 pm

Syndication

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே வடக்கு உடைபிறப்பு பகுதியைச் சோ்ந்தவா் அ. ராஜபாண்டி ( 71). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். ராஜபாண்டி திங்கள்கிழமை காலை மொபெட்டில் திசையன்விளை நோக்கிச் சென்றாராம்.

இடைச்சிவிளை பகுதியில், சென்னையிலிருந்து வந்த ஆம்னி பேருந்து மருதநாச்சிவிளை - இடைச்சிவிளை இணைப்புச் சாலையிலிருந்து திரும்பியபோது மொபெட் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை தட்டாா்மடம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காவல் ஆய்வாளா் வேலம்மாள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.