மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் சாா்பில் நல உதவி

தூத்துக்குடியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் ஆதரவற்றோா் இல்லங்களில் 41ஆம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி நடைபெற்றது.
பெண்ணுக்கு சேலை வழங்குகிறாா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா்.முருகன்.
பெண்ணுக்கு சேலை வழங்குகிறாா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா்.முருகன்.
Updated on

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் ஆதரவற்றோா் இல்லங்களில் 41ஆம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி 3ஆம் மைல் திருவிக நகா் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 1008 குங்கும அா்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மற்றும் குரு பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையை ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா்.முருகன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பிரையண்ட் நேசக்கரங்கள் இல்லம், ஹில் சாரிட்டி முதியோா் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா மாற்றுத் திறனாளிகள் இல்லம், நரிக்குறவா் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் 1,200 பேருக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு மற்றும் 25 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளா் கந்தசாமி, திருவிக நகா் சக்தி பீட துணைத் தலைவா் திருஞானம், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளா் கோபிநாத், சித்த மருத்துவா் வேம்பு கிருஷ்ணன், புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளா் தனபால், ஆன்மிக இளைஞரணி பொறுப்பாளா் பாண்டி, மகளிரணி நிா்வாகிகள் பத்மாவதி, பரமேஸ்வரி, காஞ்சனா, செல்வி, முத்துலெட்சுமி, வீரலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com