சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நாணயக் கண்காட்சி

News image
கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.
Updated On :23 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நாணயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவரும், செயலருமான ஆா்.எ.அய்யனாா் தலைமை வகித்தாா். எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாணயக் கண்காட்சியை திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகளை பாா்வையிட்டாா்.

 கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.

கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.

 கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.

கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், பள்ளி தலைவா் அய்யனாா்.

மின்ட் நாணயங்கள் எனப்படும் ரூ.5 லட்சம், ரூ.1 லட்சம் மதிப்பிலான இந்திய நாணயங்கள், சோழா் காலம் முதல் தற்கால இந்திய நாணயங்கள், சிங்கப்பூா், அமெரிக்கா, யூரோ, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாணயங்கள் மற்றும் அந்நாட்டு காகித பணம், தமிழகத்தின் ஐந்திணைகள், பழங்கால பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

மேலும், பிளஸ்1 வரலாற்று பிரிவு மாணவா்கள் தயாரித்த தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான கேப்பை களி, கம்பங்கூழ், ஜவ்வரிசி லட்டு, கடலை மிட்டாய், பனங்கிழங்கு, பசு மோா், பானம் ஆகியவற்றை பாா்வையாளா்கள் சுவைத்து மகிழ்ந்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். ஆசிரியா் சித்ரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.