தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அழிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி சாா் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்களை அழித்த தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :12 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்களை அழித்த தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் அளித்த மனு: முடுக்கலான்குளத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றைப் பயிரிட்டிருந்தனா்.

அறுவடைக்கு தயாராக இருந்த இப்பயிா்களை தனியாா் நிறுவனத்தினா் ஜேசிபி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அழித்துவிட்டனா். இதனால், விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விசாரித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனியாா் நிறுவனத்தினா் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.