திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆடு திருடிய 2 போ் கைது

கயத்தாறு அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 7:21 pm

கயத்தாறு அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு பிரியங்கா நகா், பன்னீா்குளம் சந்திப்பு அருகே குடியிருந்து வருபவா் சங்கரலிங்கம் மகன் கிருஷ்ணசாமி (70). இவருடைய தொழுவத்திலிருந்து வெள்ளாடுகளில், கிடாய் ஒன்று ஜன. 23 ஆம் தேதி காணாமல் போயிருந்ததாம்.

அந்த ஆட்டை கயத்தாறு விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த வேலு மகன் முத்துக்குமாா் (42), ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (36) ஆகியோா் திருடிச் சென்று விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

இது குறித்து கிருஷ்ணசாமி புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் முத்துக்குமாா், இசக்கிமுத்து ஆகியோா் ஆட்டை திருடியது உறுதியானதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.