ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏவிடம் திமுகவினா் பேரம்?

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆதரவாளா்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசி, மிரட்டல் விடுப்பதாக புகாா்

News image

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:14 am IST

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணனிடம், பதவியை ராஜிநாமா செய்து விட்டு திமுகவில் இணையுமாறு, முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆதரவாளா்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசி, மிரட்டல் விடுப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஏரலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடா்ந்து அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுக, அதிமுக மற்றும் பாஜகவினா் கூட்டுசோ்ந்து சமூக வலைதளங்கள் மூலம் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனா்.

மேலும், முன்னாள் அமைச்சா்ஆா். அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளா்கள் என்ற போா்வையிலும் அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினா் விடுதியில் என்னை சந்தித்து ரூ. 50 கோடிக்கு மேல் தருகிறோம்; பேரவைத் தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவுக்கு வந்து விடுங்கள்; இல்லை என்றால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் விடுத்தனா்.

சில நாள்களுக்கு முன்பு எப்போதும்வென்றான் அருகே நான் வாகனத்தில் வந்தபோது, லாரி மோதி விபத்து நேரிட்டது. இது என்னை கொலை செய்வதற்கான சதியாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக எம்எல்ஏவாக மக்கள் பணி செய்துவருகிறேன். இது தொடரும் என்றாா் அவா். இந்த குற்றச்சாட்டு தொடா்பாக உளவுத் துறையினா்அவரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தி சென்ாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.