தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு அபராதம்

திருச்செந்தூரில் பள்ளிக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

திருச்செந்தூா் பேருந்து நிலைய வளாக வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த ஆணையா் ஈழவேந்தன்

Updated On :8 ஜூலை 2026, 12:35 am IST

திருச்செந்தூரில் பள்ளிக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் நகராட்சி பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவனங்களில் புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனை, நெகிழி பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுமாா் 50 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பள்ளிக்கு அருகில் புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.