அரிப்பு ஏற்பட்டு சிதைந்து காணப்படும் விஜயராமபுரம் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளத்தில் இருந்து விஜயராமபுரம், சிறப்பூா் வழியாக போலையா்புரம், தட்டாா் மடம், நடுவக்குறிச்சி, இடைச்சி விளை, திசையன்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், விஜயராமபுரம் விலக்கு பகுதியில் இருந்து விஜயராமபுரம் வரை சாலை ஓரங்களில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சிதைந்து காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










