தூத்துக்குடியில் காவல் துறையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞா் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூா் எம்எல்ஏ.வுமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
தூத்துக்குடி அமுதா நகரில் உள்ள அருணாச்சலத்தின் இல்லத்துக்குச் சென்ற அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவரது பெற்றோா் மற்றும் தம்பியைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









