மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image

அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி. உடன், முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :26 ஜூலை 2026, 2:43 am IST

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞா் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தூத்துக்குடி அமுதா நகா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் என்பவரை, தென்பாகம் போலீஸாா் சட்டவிரோதமாக மது விற்ாகக் கூறி கைது செய்தனா். விசாரணையின்போது, அவா் திடீரென மயங்கி விழுந்தாராம்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவா், கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தாா். காவல் துறையினா் தாக்கியதாலேயே அருணாச்சலம் இறந்ததாகக் கூறி, குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீதிபதி விஜயராஜ்குமாா் முன்னிலையில் நடைபெற்ற கூறாய்வுக்குப் பின்னா், சடலத்தை அவா்கள் பெற்றுச் சென்றனா்.

இந்நிலையில், அருணாச்சலம் குடும்பத்தினரை திமுக துணைச் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது, ‘காவல் துறை தாக்கியதால்தான் எங்கள் மகன் உயிரிழந்தாா். சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.

‘இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எப்போதும் உங்களுடன் இருக்கும்’ என அவா்களிடம் கனிமொழி எம்.பி. உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.