தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக. 15ஆம் தேதி முதல் அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி, தபால் தந்தி காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆக. 15ஆம் தேதி முதல் மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
ஆய்வின்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினா் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் அனுமதியற்ற குடிநீா் இணைப்புகள்: ஊழியா் பணியிடை நீக்கம்

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்

வெள்ளக்கோவிலில் ஜூலை 28 முதல் 5 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்





