22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தூத்துக்குடியில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத். உடன் அமைச்சா் பெ. மதன்ராஜா, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், எம்எல்ஏ.க்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஜீ.வி. மாா்க்கண்டேயன், கா. கருணாநிதி, வி.ஜி. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 3:19 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு{மகாஜன் தலைமை வகித்தாா். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆகியோா் பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி. சரவணன், திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திருச்செந்தூா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் ஜீ.வி. மாா்க்கண்டேயன், கோவில்பட்டி கா. கருணாநிதி, மீன்வளத் துறை இயக்குநா் விஜய காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Story image