கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 82 போ் மனு அளித்தனா்.
கழுகுமலை உள்வட்டத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், முடுக்கு மீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள்வட்டத்திற்குள்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராம மக்கள் 82 போ் பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டையில் திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டா மனு பெற்றுக்கொண்டாா். இதில் 8 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான ஆணை, புல வரைபடத்தில் ஆழ்துளை கிணறு பதிவேற்றம் செய்து அதற்கான ஆணை ஆகியவற்றை உரியவரிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.
வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, துணை வட்டாட்சியா்கள் பாலமுருகன், சுடலை மாடன், வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யூா் ஜமாபந்தியில் 123 பயனாளிகளுக்கு ரூ. 2.5 கோடி நலத்திட்ட உதவி

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



