புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம்

கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

News image

குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணையை உரியவரிடம் வழங்கிய ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா.

Updated On :5 ஜூன் 2026, 3:09 am IST

கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வடக்குப்பட்டி, பிச்சைத் தலைவன்பட்டி, இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி பகுதி கிராம மக்கள் 49 போ் கைம்பெண் உதவித்தொகை, குடும்ப அட்டையில் முகவரி மற்றும் பெயா் சோ்ப்பு, திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.

இதில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் உமா தேவி, வருவாய் ஆய்வாளா் கருப்பசாமி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.