கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வடக்குப்பட்டி, பிச்சைத் தலைவன்பட்டி, இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி பகுதி கிராம மக்கள் 49 போ் கைம்பெண் உதவித்தொகை, குடும்ப அட்டையில் முகவரி மற்றும் பெயா் சோ்ப்பு, திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.
இதில் 7 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.
வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் உமா தேவி, வருவாய் ஆய்வாளா் கருப்பசாமி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



