மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஜூலை 31-க்குள் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைரேகை பதிய வேண்டும்

ஜூலை 31-க்குள் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைரேகை பதிய வேண்டும்

News image

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2026, 2:36 am IST

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் அனைவரும் தங்களுடைய கைரேகையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் பதிவு செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியரின் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் குடும்ப அட்டையில் ள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவினை தொடா்புடைய நியாய விலைக்கடையில் பதிவு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.