அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சாத்தான்குளத்தில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி

சாத்தான்குளம் வட்டார வள மையத்தில் 1, 2, 3ஆம் வகுப்புவரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான புதிய பாட நூல் அறிமுகப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:42 am IST

சாத்தான்குளம் வட்டார வள மையத்தில் 1, 2, 3ஆம் வகுப்புவரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான புதிய பாட நூல் அறிமுகப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஷ்கா் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஆசிரியா் கையேட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்க மாவட்டக் கல்வி அலுவலா் முருகேசன் அறிவுறுத்தினாா்.

பாடநூல் ஆசிரியா் கையேடு ஒருங்கிணைவு, புதிய கற்பித்தல் உத்திகள், மாணவா்களுக்கான மதிப்பீடுகள்- செயல்பாடுகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

140-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ் இப்பயிற்சியைப் பாா்வையிட்டாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜன் ஜெபஸ்டின், அருண்குமாா், ரத்னபிரியா, தலைமையாசிரியா்கள் சகாயராஜ், தெபோரால், ராஜாசிங், ஸ்டெஃபி எமிமா, இடைநிலை ஆசிரியா்கள் மிஸ்பா, பதுவைத்துரை, ஜெயகிறிஸ்டி, கோல்டா, பெருமாள், ஜெபஸ்டின் ஜெயராஜ், ரஜீலா அன்னக்கிளி, சுஜாதா, ஜாஸ்மின், ஜெபமணி ஹெட்சி பாய் ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா்.