அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை, மண்வளம் காப்போம் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் அமுதுண்ணாக்குடி சிறு- குறு விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், மதுரம் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். வேளாண் அலுவலா் ராமலட்சுமி பேசுகையில், இயற்கை மண்வளங்களை பாதுகாக்காவிடில் அந்த மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மண் வளத்தை காக்க விவசாயிகள் அதற்கான உரங்களை பயன்படுத்தவும் இயற்கை விவசாயம் செய்யவும் முன் வர வேண்டும்; வேளாண்மை துறை உதவும் என்றாா்.
மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நெல், உளுந்து, பாசி, காய்கனி விதைகள் என பல வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா் சிவராம், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கிருத்திகா, எழில் ஆகியோா் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் திட்ட பயன்கள், அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.
தொடர்புடையது

இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களால் ஆரோக்கியம் மேம்படும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



