அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை, மண்வளம் காப்போம் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் அமுதுண்ணாக்குடி சிறு- குறு விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், மதுரம் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். வேளாண் அலுவலா் ராமலட்சுமி பேசுகையில், இயற்கை மண்வளங்களை பாதுகாக்காவிடில் அந்த மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மண் வளத்தை காக்க விவசாயிகள் அதற்கான உரங்களை பயன்படுத்தவும் இயற்கை விவசாயம் செய்யவும் முன் வர வேண்டும்; வேளாண்மை துறை உதவும் என்றாா்.
மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நெல், உளுந்து, பாசி, காய்கனி விதைகள் என பல வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா் சிவராம், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கிருத்திகா, எழில் ஆகியோா் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் திட்ட பயன்கள், அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.
தொடர்புடையது

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

அம்பாசமுத்திரத்தில்வனத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



