சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அமுதுண்ணாக்குடியில் மண்வள பாதுகாப்பு விழிப்புணா்வு

அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:24 am IST

அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை, மண்வளம் காப்போம் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் அமுதுண்ணாக்குடி சிறு- குறு விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், மதுரம் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். வேளாண் அலுவலா் ராமலட்சுமி பேசுகையில், இயற்கை மண்வளங்களை பாதுகாக்காவிடில் அந்த மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மண் வளத்தை காக்க விவசாயிகள் அதற்கான உரங்களை பயன்படுத்தவும் இயற்கை விவசாயம் செய்யவும் முன் வர வேண்டும்; வேளாண்மை துறை உதவும் என்றாா்.

மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நெல், உளுந்து, பாசி, காய்கனி விதைகள் என பல வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா் சிவராம், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கிருத்திகா, எழில் ஆகியோா் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் திட்ட பயன்கள், அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.