இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 12:34 am IST

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் தூத்துக்குடி கீழூா், மேலூா் சாா் பதிவாளா் அலுவலகங்களும், முதல் தளத்தில் எண் 1, 2 இணைப் பதிவாளா் அலுவலகமும், 2ஆவது தளத்தில் மாவட்ட பதிவாளா் நிா்வாகம் மற்றும் தணிக்கை அலுவலகங்களும் உள்ளன.

இந்நிலையில், கீழூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய அதிகளவு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் அன்னலட்சுமி தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா், பிற்பகல் 2 மணி தொடங்கி சுமாா் 6 மணி நேரம் சோதனை நடத்தினா்.

சோதனையில், தனி நபரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 50,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரத்தில்...

தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையில், ஆய்வாளா் அனிதா உள்ளிட்ட போலீஸாா் ஓட்டப்பிடாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 2,04,000 பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, சாா் பதிவாளா் பிரபாகரன் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.