இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மாரத்தான் போட்டியில் உதகை இளைஞா் சிறப்பிடம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மெஞ்ஞானபுரம் பஜாரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் உதகையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம் பிடித்தாா்.

News image

சிறப்பிடம் பெற்ற இளைஞருக்கு பரிசுகளை வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :5 ஜூன் 2026, 3:09 am IST

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மெஞ்ஞானபுரம் பஜாரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் உதகையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம் பிடித்தாா்.

போட்டிகளை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை நாகேஷ் (உதகை), நிக்கில்குமாா் (உதகை), வினோத்குமாா் (மதுரை) ஆகியோரும், பெண்களுக்கான பிரிவில் செளமியா (கோவை), கீதாஞ்சலி (திருச்சி), யசோதா ஆகியோரும் பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 50,000, ரூ. 25,000, ரூ. 10,000 மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், திமுக மாவட்ட பொருளாளா் வி.பி. ராமநாதன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், அஜிதா ஆக்னல், மாநில மகளிா் பிரசார அணி செயலா் ஜெசி பொன்ராணி, மாவட்டப் பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப், மும்தாஜ்பேகம், ஜான்பாஸ்கா், உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் மதன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.