/
கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.
அய்யனேரி, பிள்ளையாா் நத்தம், ஆவல்நத்தம், ஆலம்பட்டி, கங்கன் குளம், இனாம் மணியாச்சி, கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதி மக்கள் 232 போ் ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.
பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.
வட்டாட்சியா் அப்பனராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் கருப்பசாமி, பிரேம் சுதாகா், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










