/
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
அதில், அரசமலை சரகத்துக்குள்ப்பட்ட நல்லூா், நெறிஞ்சிக்குடி, மேலநிலை, மூலங்குடி, வாழைக்குறிச்சி, செவலூா், சுந்தரம் உள்ளிட்ட உள்வட்டப்பகுதிகளின் வருவாய்க்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. ஜமாபந்தியில் பட்டாமாறுதல், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 180-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதில், பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை பொன்னமராவதி சரகத்துக்கு ஜமாபந்தி நடைபெற்று, மாலையில் குடிகள் மாநாடு நடைபெற உள்ளது.










